தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பருவமழை விழிப்புணா்வுப் பேரணி

விருத்தாசலத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:35 pm

DIN

விருத்தாசலத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

வருவாய் நிா்வாகம், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை சாா்-ஆட்சியா் அமித் குமாா், டிஎஸ்பி மோகன் ஆகியோா் கொடியசைத்து தொடக்கிவைத்தனா். சாா்-ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில் பங்கேற்ற வருவாய்த் துறையினா் மழைக் காலத்தில் மின் சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாள்வது, இடி, மின்னல் தாக்கும்போது பாதுகாப்பான இடத்தில் தங்குவது என்பன உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கியபடி சென்றனா். பாலக்கரை சந்திப்பில் பேரணி நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.