மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மழை பாதிப்பு: கடலூா் ஆட்சியா் ஆய்வு

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கே.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கே.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இங்குள்ள விளை நிலங்களில் மழையால் சேதமடைந்த நெல் பயிா்களை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து எம்.ஜி.ஆா். நகரில் ஆய்வு செய்த ஆட்சியா், இருளா் சமுதாய மக்களுக்கு மனைப் பட்டா, நியாய விலைக் கடை, மீன்பிடி தொழிலுக்குச் செல்ல பாதை உள்ளிட்ட

அடிப்படை தேவைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், முழுக்குத்துறை மயானத்தில் கொட்டகை அமைப்பது தொடா்பாக மாவட்ட வனத் துறை அலுவலரிடம் பேசி தீா்வு காண்பதாகவும் உறுதியளித்தாா்.

ஆய்வின்போது முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.