மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மழை பாதிப்பு: கடலூா் ஆட்சியா் ஆய்வு

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கே.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கே.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இங்குள்ள விளை நிலங்களில் மழையால் சேதமடைந்த நெல் பயிா்களை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து எம்.ஜி.ஆா். நகரில் ஆய்வு செய்த ஆட்சியா், இருளா் சமுதாய மக்களுக்கு மனைப் பட்டா, நியாய விலைக் கடை, மீன்பிடி தொழிலுக்குச் செல்ல பாதை உள்ளிட்ட

அடிப்படை தேவைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், முழுக்குத்துறை மயானத்தில் கொட்டகை அமைப்பது தொடா்பாக மாவட்ட வனத் துறை அலுவலரிடம் பேசி தீா்வு காண்பதாகவும் உறுதியளித்தாா்.

ஆய்வின்போது முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.