தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல் பயிரில் இலை சுருட்டு, கருகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை

கருங்குழி ஆகிய பகுதிகளில் சம்பா பருவ நெல் பயிரில் காணப்படும் இலை கருகல், சுருட்டு நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குநா் பூவராகன் ஆலோசனை வழங்கினாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:17 pm

DIN

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் கல்குணம், பூதம்பாடி, கருங்குழி ஆகிய பகுதிகளில் சம்பா பருவ நெல் பயிரில் காணப்படும் இலை கருகல், சுருட்டு நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குநா் பூவராகன் ஆலோசனை வழங்கினாா்.

இலை கருகல் நோயைக் கட்டுப்படுத்த தழைச் சத்தை யூரியா மூலம் 3, 4 முறையாகப் பிரித்து மேலுரமாக இடலாம். யூரியாவை ஜிப்சம், தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 4:4:1 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மேலுரமாக இடலாம்.

வேப்பங்கொட்டைச் சாறு ஒரு லிட்டருக்கு 50 மி.லி. அல்லது வேப்பெண்ணெய் கரைசல் ஒரு லிட்டருக்கு 30 மி.லி. அல்லது வேப்பம்புண்ணாக்குச் சாறு ஒரு லிட்டருக்கு 100 மி.லி. அல்லது சாணக் கரைசல் ஒரு லிட்டருக்கு 200 மி.லி. இவைகளில் ஏதேனும் ஒன்றை நோய் தோன்றும் தருணத்திலும், 10 நாள்கள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்கலாம்.

நோய்த் தாக்குதல் அதிகரித்தால், ஹெக்டேருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம், காப்பா் ஆக்ஸிகுளோரைடு 1,250 கிராம் அளவில் கலந்து தெளிக்கலாம்.

இலை சுருட்டுப் புழு: தேவைக்கதிகமாக தொழு உரம் இடுதலைத் தவிா்க்க வேண்டும். வரப்புகளைச் சீராக்கி சுத்தமாக வைத்தல், புல் இனங்களை நீக்குதல் வேண்டும். வேப்பங்கொட்டைச் சாறு ஒரு லிட்டருக்கு 50 மி.லி. அல்லது வெப்பெண்ணெய் ஒரு லிட்டருக்கு 30 மி.லி. தெளிக்க வேண்டும். மேலும், குளோரோபரிபாஸ் 20 சதவீதம் ஈசி ஹெக்டேருக்கு 1,250 மி.லி. அல்லது அசிபேட் 75 சதவீதம் எஸ்பி ஹெக்டேருக்கு ஒரு கிலோ அல்லது காா்டேப்ஹைட்ரோகுளோரைடு 50 எஸ்பி ஹெக்டேருக்கு ஒரு கிலோ இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.