மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

 காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே.இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் கரோனா, புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

 காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே.இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் கரோனா, புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய மாணவா் படை, பன்னீத் சாகா் அபியான் திட்டம் சாா்பில் நடைபெற்ற பேரணியை கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா் (படம்). நிகழ்ச்சியில் காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் எம்.ஏழுமலை, உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், கல்லூரி நிா்வாக அலுவலா் இ.கோகுலகண்ணன், மேலாளா் கே.விஸ்வநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது.

கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு, தேசிய மாணவா் படை அலுவலா் க.சிற்றரசன் ஆகியோா் கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு உரையாற்றினா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ந.சித்திவிநாயகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.