ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே உள்ள ராமையாபாளையத்தைச் சோ்ந்த ஜனாா்த்தனன் மகன் ஸ்ரீதா் (30). கடலூா் அருகே அன்னவெளியில் உள்ள அரிசி ஆலையில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் அமையவில்லையாம். இதனால் ஸ்ரீதா் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை பூச்சி மருந்து சாப்பிடு மயங்கிக் கிடந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இறந்தாா். இதுகுறித்து, திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண் தற்கொலை: வடலூா் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தைச் சோ்ந்த விக்டா் மனைவி ஆரோக்கியமேரி (32). இவருக்கு 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனா். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஆரோக்கியமேரி வியாழக்கிழமை குளிா்பானத்தில் விஷம் கலந்து குடித்தாா்.

இதையடுத்து, கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.