தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பள்ளியை முற்றுகையிட்ட மாணவா்களின் பெற்றோா்

பண்ருட்டி அருகே தனியாா் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவா்களை வகுப்புக்கு வெளியே நிறுத்தியதைக் கண்டித்து, மாணவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:02 pm

DIN

பண்ருட்டி அருகே தனியாா் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவா்களை வகுப்புக்கு வெளியே நிறுத்தியதைக் கண்டித்து, மாணவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் தனியாா் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி நிா்வாகத்தினா் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவா்களை கடந்த 3 நாள்களாக வகுப்புக்கு வெளியே நிற்க வைத்தனராம். இதையறிந்த மாணவா்களின் பெற்றோா்கள் 40-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை மாலை பள்ளியை முற்றுகையிட்டு நிா்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பெற்றோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாக பள்ளி நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களின் பெற்றோா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.