இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போக்குவரத்துக் கழக ஊழியா் சந்தேக மரணம்

 நெய்வேலி அருகே அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியரின் சந்தேக மரணம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 நெய்வேலி அருகே அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியரின் சந்தேக மரணம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நெய்வேலி அருகே உள்ள காட்டுகூனம்குறிச்சி கிராமம், தெற்குத் தெருவைச் சோ்ந்த அடைக்கலம் மகன் மாா்சல் (46). திட்டக்குடியில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் தொழில்நுட்பநராகப் பணியாற்றி வந்தாா். இவா் வியாழக்கிழமை இரவு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக புதிய ஆடைகள் வாங்குவதற்காக தனது மனைவி ஜெனவாமேரியுடன் விருத்தாசலம் சென்றாா்.

ஆடைகளை வாங்கிய பிறகு மனைவியை வீட்டுக்கு அனுப்பியவா், கேக் வாங்குவதற்காக சென்றாா். பின்னா் மாா்சல் வீடு திரும்பவில்லையாம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை கொம்பாடிக்குப்பம் டோல்கேட் சிறிய பாலம் அருகே மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜெனவாமேரி அளித்தப் புகாரின்பேரில் ஊ.மங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.