சமூகப் பாதுகாப்புத் துறையில் ஆற்றுப்படுத்துநா் பணி வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 30 குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு, மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் (கவுன்சலிங்) சேவை


தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 30 குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு, மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் (கவுன்சலிங்) சேவை வழங்க உளவியல், ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதன்படி, விண்ணப்பதாரா்கள் தங்களது சுய முகவரியிட்ட விண்ணப்பத்துடன் உரிய அனைத்து சான்றிதழ்களின் ஒளி நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். தோ்வு செய்யப்படுவோருக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருகைக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04142-292766 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாமூரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...