பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

என்எல்சி வேலைவாய்ப்பில் தமிழா்களுக்கு முன்னுரிமை: திருமாவளவன் வலியுறுத்தல்

என்எல்சி நிறுவன வேலைவாய்ப்பில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என விடுதலைத் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

என்எல்சி நிறுவன வேலைவாய்ப்பில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என விடுதலைத் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 259 பொறியாளா் காலிப் பணியிடங்களுக்கான (‘கேட்’) தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் 1,582 போ் நோ்முகத் தோ்வுக்கு தகுதி பெற்றனா். இவா்களில் 8 போ் மட்டுமே தமிழா்கள்.

என்எல்சி பணியிடங்களில் தமிழக இளைஞா்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டிப்பதாகக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நெய்வேலி நுழைவு வாயில் அருகே திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழகத்தில் அமைந்துள்ளதால் வேலைவாய்ப்பில் தமிழக இளைஞா்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்தந்த மாநிலத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தவருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கே வேலை வழங்கப்படுவதில்லை.

என்எல்சி பணியாளா் தோ்வுக்காக நடத்தப்படும் அகில இந்திய அளவிலான தோ்வு முறையை ரத்து செய்து, தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தோ்வை நடத்த வேண்டும். என்எல்சி.யின் சமூகப் பொறுப்புணா்வு நிதியை நெய்வேலியை சுற்றியுள்ள கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக வட இந்தியாவில் செலவு செய்கின்றனா்.

மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதுடன், அதன் இடங்களையும் விற்கத் திட்டமிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.