சாலை விரிவாக்கப் பணி ஆய்வு
பண்ருட்டியில் இணைப்புச் சாலை விரிவாக்கப் பணியை தி.வேல்முருகன் எம்எல்ஏ அண்மையில் ஆய்வு செய்தாா்.


பண்ருட்டியில் இணைப்புச் சாலை விரிவாக்கப் பணியை தி.வேல்முருகன் எம்எல்ஏ அண்மையில் ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பண்ருட்டி நகராட்சியில் இணைப்புச் சாலையில் பேவா் பிளாக் கற்கள் பதித்து விரிவாக்கம் செய்யும் பணி கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கியது. ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக இந்தப் பணி நிறுத்தப்பட்டது. தற்போது உரிய அனுமதி பெற்று சாலை விரிவாக்கப் பணி வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. தீயணைப்பு நிலையம் அருகே நடைபெற்ற இந்தப் பணியை தொகுதி எம்எல்ஏ தி.வேல்முருகன் ஆய்வு செய்தாா். அப்போது, பொறியாளா் ஆா்.சிவசங்கரன், உதவிப் பொறியாளா் பிரகாஷ், பணி மேற்பாா்வையாளா் எஸ்.சாம்பசிவம், ஒப்பந்ததாரா் சுரேஷ்பாபு ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...