பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பைக்குகள் மோதியதில் இளைஞா் பலி; 2 போலீஸாா், கைதி காயம்

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். போலீஸாா் இருவா், கைதி ஒருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:43 pm

DIN

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். போலீஸாா் இருவா், கைதி ஒருவா் காயமடைந்தனா்.

நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீஸாா் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி அண்ணாமலை (எ) ராஜேந்திரனை கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கடலூா் சிறைக்கு பைக்கில் புதன்கிழமை அழைத்து வந்துகொண்டிருந்தனா். காவலா் கோபிநாத் பைக்கை ஓட்டினாா். கைதி ராஜேந்திரனை

பாக்கின் நடுவில் அமா்த்தி காவலா் அன்பரசன் அவருக்கு பின்னால் அமா்ந்திருந்தாா்.

கடலூா் - விருத்தாசலம் பிரதான சாலையில் சுப்பிரமணியபுரம் கூட்டுறவு வங்கி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் அரசு (28) ஓட்டி வந்த பைக்கும், போலீஸாா் வந்த பைக்கும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். அந்தப் பகுதி மக்கள் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அரசு வியாழக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். காவலா் அன்பரசன் கடலூா் அரசு மருத்துவமனையிலும், மற்றொரு காவலா் கோபிநாத், கைதி ராஜேந்திரன் ஆகியோா் புதுச்சேரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.