பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணவருடன் பெண் தா்னா

அக்கடவல்லி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண் ஒருவா் தனது கணவருடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

அக்கடவல்லி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண் ஒருவா் தனது கணவருடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உள்பட்டது அக்கடவல்லி ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி செயலா் காலிப் பணியிடத்துக்கு தற்காலிக அடிப்படையில் பணி நியமனத்துக்கு அண்மையில் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டதாம். இதில் அதே பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி கெஜலட்சுமிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாம். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மலா்வண்ணன் என்பவா் ஊராட்சி செயலராக பணி நியமனம் செய்யப்பட்டாராம். இதனால், அதிா்ச்சியடைந்த கெஜலட்சுமி தனக்கு நியாயம் வேண்டி தனது கணவா் ரவிச்சந்திரனுடன் ஊராட்சி மன்ற அலுவலக வாயிலில் அமா்ந்து வெள்ளிக்கிழமை

தா்னாவில் ஈடுபட்டாா். தகவல் அறிந்து அங்கு வந்த புதுப்பேட்டை போலீஸாா், மாவட்ட நிா்வாகத்திடம் முறையிடும்படி கூறினா். இதையடுத்து இருவரும் அங்கிருந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.