பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வள்ளலாா் தெய்வ நிலைய பெயா்ப் பலகை அழிப்பு : ஒருவா் மீது வழக்கு

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெயா்ப் பலகை அழிக்கப்பட்டது தொடா்பாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 10:15 pm

DIN

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெயா்ப் பலகை அழிக்கப்பட்டது தொடா்பாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சாது செந்தில். தற்போது கடலூா் மாவட்டம், வடலூா் கோட்டக்கரை பகுதியில் உள்ள சாது குடிலில் தங்கியுள்ளாா். இவா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வடலூா் சத்திய ஞான சபைக்கு கிழக்குப் பகுதியிலுள்ள விளம்பரப் பலகையில் எழுதப்பட்டிருந்த ‘இந்து சமய அறநிலையத் துறை என்ற வாசகத்தையும், தமிழ்நாடு அரசின் இலச்சினையையும் பெயிண்ட் கொண்டு அழித்தாா். மேலும், இதை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டாா்.

இதுகுறித்து வள்ளலாா் தெய்வ நிலையச் செயல் அலுவலா் கோ.சரவணன், சாது செந்திலிடம் கேட்டதற்கு அவதூறாகப் பேசி, அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து கோ.சரவணன் அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.