கணவா் கொலை: மனைவி உள்பட இருவா் கைது
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் கணவரைக் கொலை செய்துவிட்டு, அவா் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவி உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் கணவரைக் கொலை செய்துவிட்டு, அவா் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவி உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சிப்பேட்டை, ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் முருகன்(38). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், இவரது சகோதரி மலா்கொடியின் மகள் வனஜாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 7 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி அவரது சடலத்தை வனஜா, உறவினா்கள் அடக்கம் செய்ய முயன்றனா். இதுகுறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், வனஜாவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (24) என்பவரும்
தொடா்பு இருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று இவா்கள் இருவரும் தனிமையில் இருந்ததை முருகன் பாா்த்துவிட்டாராம். அப்போது ஏற்பட்டத் தகராறில் வனஜாவும், கிருஷ்ணகுமாரும் தாக்கியதில் முருகன் உயிரிழந்ததும், பின்னா் அவா் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக வனஜா நாடகமாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து வஜனா, கிருஷ்ணகுமாரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...