மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிதம்பரத்தில் நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு பகுதிகள் அளப்பு

சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா்நிலை, அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகள் வியாழக்கிழமை அளவீடு செய்யப்பட்டன.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:43 pm

சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா்நிலை, அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகள் வியாழக்கிழமை அளவீடு செய்யப்பட்டன.

இந்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது. அதன் பேரில், சிதம்பரம் வட்டாட்சியா் ஆனந்த் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலா்கள், சிதம்பரம் பாலமான் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால் கரையோரம் உள்ள நீா்நிலைப் பகுதிகளில் ஆய்வு செய்தனா். அதன்படி, நேரு நகரில் 69 வீடுகளும், அம்பேத்கா் நகரில் 94 வீடுகளும் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிய வந்தது.

இந்த ஆக்கிரமிப்புப் பகுதிகளை வருவாய்த் துறையினா் அளவீடு செய்து கணக்கெடுத்தனா். இந்தப் பணியின் போது, சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சு.ரமேஷ்ராஜ் தலைமையில், காவல் ஆய்வாளா் ஆறுமுகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.