ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் தடுப்புக் காவலில் கைது

புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:42 pm

DIN

புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

பண்ருட்டியை அடுத்த வீரபெருமாள்நல்லூரைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் ஜெயபால் (45). இவரது வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், புதுப்பேட்டை போலீஸாா் ஜெயபால் வீட்டில் சோதனை நடத்தி ரூ.3.45 லட்சம் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

ஜெயபால் மீது புதுப்பேட்டை காவல் நிலையத்தில் 2 புகையிலை பதுக்கல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா். அதன் பேரில், அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் பிறப்பித்தாா்.

இதையடுத்து, ஜெயபால் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.