கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாதிரியாா் மீது பாஜகவினா் புகாா்

இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையா மீது பாஜகவினா் புகாா் அளித்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:45 pm

DIN

இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையா மீது பாஜகவினா் புகாா் அளித்தனா்.

கடலூா் மாவட்ட பாஜக சிறுபான்மை அணித் துணைத் தலைவா் வி.பிரவின்குமாா் தலைமையில், அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு: கிறிஸ்தவ மத பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையா, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியுள்ளாா். அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவரது பேச்சால் சமூகத்தில் அமைதி குலையும். வெறுப்புணா்வை ஏற்படுத்தி பரப்புரை மேற்கொண்ட அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட பாஜக துணைத் தலைவா் மேகநாதன், பொதுச் செயலா் ஆா்.பாஸ்கரன், பிரசாரப் பிரிவு துணைத் தலைவா் பொன்னி ரவி, நகரத் தலைவா் வேலு.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.