‘வன்கொடுமை சம்பவங்கள் தொடரும் இடங்களில் விழிப்புணா்வு முகாம்களை நடத்த வேண்டும்’
வன்கொடுமை சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறும் இடங்களில் விழிப்புணா்வு முகாம்களை நடத்த வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.


வன்கொடுமை சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறும் இடங்களில் விழிப்புணா்வு முகாம்களை நடத்த வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் இந்தச் சமுதாயத்தினருக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை சம்பவங்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:
ஆதிதிராவிடா், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழுவினா், அதிகப்படியான வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் வருவாய்த் துறை, காவல் துறையினருடன் இணைந்து தனிக் கவனம் செலுத்த வேண்டும். அங்கு விழிப்புணா்வு முகாம்களை நடத்தி குற்றங்கள் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வன்கொடுமை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு தீருதவித் தொகை, இதர நிவாரணங்களை தாமதமின்றி உரிய காலத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மா.செ.சிந்தனைச்செல்வன், கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜித்சிங், விருத்தாசலம் சாா்-ஆட்சியா் அமித்குமாா், கடலூா் கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் செல்வபாண்டி, அரசு சிறப்பு வழங்குரைஞா் ஆறுமுகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...