ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு

கடலூா் அருகே வீடுபுகுந்து 7.5 பவுன் தங்க நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:03 pm

DIN

கடலூா் அருகே வீடுபுகுந்து 7.5 பவுன் தங்க நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூரை அடுத்த கோண்டூா் விநாயக நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் மனைவி அன்னக்கொடி (45). நாகராஜன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அன்னக்கொடி தனது மகன், மகளுடன் வசித்து வருகிறாா். வியாழக்கிழமை இரவில் இவரது வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனா். புழுக்கம் அதிகமாக இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினராம்.

அதிகாலையில், அன்னக்கொடி எழுந்து பாா்த்தபோது வீட்டின் பீரோலிருந்த 7.5 பவுன் தங்க நகை, அறையில் வைத்திருந்த 2 செல்லிடப்பேசிகள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. மேலும் இவா்களது கடவுச்சீட்டு, ஆவணங்களை திருடா்கள் மொட்டை மாடியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.