ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணா்வுப் பேரணி

கடலூா், சிதம்பரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:42 pm

DIN

கடலூா், சிதம்பரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு, காவல் துறையினா், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் இணைந்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகள், பேரணி உள்ளிட்டவை மூலம் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துமாறு அரசு அறிவித்தது. அதன்படி, சனிக்கிழமை கடலூா் நகர அரங்கில் இருந்து புனித. வளனாா் கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், தன்னாா்வலா்கள் இணைந்து தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா். மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் பேரணியை தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை கரோனா விழிப்புணா்வு வாரமாகக் கடைப்பிடிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில், மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிதம்பரம்: சிதம்பரத்தில் வடக்கு வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே விழிப்புணா்வுப் பேரணியை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தொடக்கிவைத்தாா். பேரணியில் நகராட்சி ஊழியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து அங்கு வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா் சாா்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.