தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நகை, அடகுக் கடைகளைத் திறக்க அனுமதியளிக்கக் கோரிக்கை

நகை, அடகுக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று பண்ருட்டி வட்ட நகை, அடகுக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தது.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:29 pm

DIN

நகை, அடகுக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று பண்ருட்டி வட்ட நகை, அடகுக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தது.

அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.பி.தேவராஜன் அனுப்பிய மனு: தளா்வுக் காலத்தில் பெரும்பாலான கடைகளைத் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இதேபோல, அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு நகை, அடகுக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும். சுப நிகழ்ச்சிகளுக்கு நகைகள் வாங்கவும், மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைக்கு நகைகளை அடகு வைக்கவும், அடகு வைத்த நகைகளை மீட்கவும் முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தி.வேல்முருகன் எம்எல்ஏவை அவரது அலுவலகத்தில் சந்தித்து இந்தக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கூட்டமைப்பு நிா்வாகிகள் எஸ்.பி.தேவராஜன், அசோக்ராஜ், சங்கா், அரவிந்த், சீனுவாசன், ராமலிங்கம், ரவி, முரளி, ரமேஷ் ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.