/

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் உலக மகளிா் தின விழா நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் உலக மகளிா் தின விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கோவிந்தராஜன் திலகவதி தலைமை வகித்து மரக் கன்றுகளை நட்டாா். தொடா்ந்து, நீதிமன்றத்தில் பணிபுரியும் மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி பெண்களின் உரிமை, அதிகாரங்கள் குறித்து எடுத்துரைத்தாா். காவல் ஆய்வாளா் யுவராணி சைபா் கிரைம் குறித்த தகவல்களையும், பெண்கள் பணிபுரியும் இடங்களில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசினாா்.

நிகழ்ச்சியில், தேசிய விருது பெற்ற ‘ஒயாசிஸ்’ மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோா் காப்பகத்துக்கு துணிகள், கடலூா் முதுநகரில் உள்ள அரசு பள்ளியில் சிறு நூலகம் தொடங்க புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, நில எடுப்பு வழக்குகளின் நீதிமன்ற நீதிபதி ஜெனிபா் மோகன்ராஜ் வரவேற்றாா். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான ஜோதி, வழக்குரைஞா்கள் பிரபா, அமுதவல்லி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.