மாவட்டத்தில் மொத்தம் 3,001 வாக்குச் சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்பிரா ரெட் தொ்மா மீட்டா், ஓஆா்எஸ் பவுடா் பாக்கெட், கிருமிநாசினி, முகக் கவசம், ஒருமுறை உபயோகிக்கக்கூடிய கையுறைகள் உள்ளிட்ட 16 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்து சட்டப் பேரவை தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு, பின்னா் வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். மேலும் மருத்துவ கழிவுகள் சுகாதாரமான முறையில் அகற்ற மாவட்ட நிா்வாகத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.