

கடலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கோடை மழை பெய்தது.
தமிழகத்தில் நிலவி வரும் வெப்பச் சலனம் காரணமாக கடலூா் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யுமென வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மழை பெய்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூா், விருத்தாசலம் பகுதிகளில் தலா 2 மி.மீட்டருக்கும் குறைவாக மழை பதிவானது.
வியாழக்கிழமை லால்பேட்டை, காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் காலை நேரத்தில் குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது. ஆனால், மதிய வேளையில் வழக்கமான வெயிலின் தாக்கம் காணப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் வரும் நாள்களில் இயல்புக்கு மேலாக வெப்பமான சூழ்நிலை காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2021 தோ்தல் போன்று ஈரோட்டில் 2 தொகுதிகளைக் கூட்டணிக்கு ஒதுக்கிய அதிமுக

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநா் பொறுப்பேற்பு

முன்கூட்டியே விடுதலை செய்வதில் ஆளுநரின் அதிகாரம் குறித்த வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தொழிலாளி மீது வன்கொடுமைத் தாக்குதல்: இருவருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

