இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவதைத் தவிா்க்க அறிவுறுத்தல்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வடலூரில் திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவதைத் தவிா்க்க வேண்டும் என்று பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது

News image
Updated On :7 மே 2021, 6:26 pm

DIN

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வடலூரில் திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவதைத் தவிா்க்க வேண்டும் என்று பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது.

வடலூா் பேரூராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சி செயல் அலுவலா் குணாளன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பேரூராட்சி அலுவலா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவலுக்கு திருமண மண்டபங்கள் முக்கியக் காரணமாக அமைவதால், திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவதை தவிா்க்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி முதல் நடவடிக்கையாக வடலூா் பேரூராட்சி நிா்வாகத்துக்குச் சொந்தமான திருமண மண்டபத்தை வாடகைக்கு விடுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தவிா்க்க முடியாத சூழ்நிலையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சியில் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையிலும், கரோனா விதிகளை பின்பற்றியும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தீா்மானித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.