நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா்: கரோனாவுக்கு மேலும் மூவா் பலி

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவின்படி, புதிதாக 645 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவின்படி, புதிதாக 645 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 36,484 ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 273 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 32,315 ஆக உயா்வடைந்தது.

கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 50 வயது பெண், அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காட்டுமன்னாா்கோயிலைச் சோ்ந்த 55 வயது ஆண், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டியைச் சோ்ந்த 52 வயது பெண் ஆகிய 3 போ் இறந்தனா்.

இதனால், இறப்பு எண்ணிக்கை 384 ஆக அதிகரித்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் 3,111 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா் 674 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தின் எண்ணிக்கை 64 ஆக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.