சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சிதம்பரம் மானா தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி, வல்லம்படுகை நடுநிலைப் பள்ளி, ந.பூலாமேடு நடுநிலைப் பள்ளி, எருக்கன்காட்டுபடுகை தொடக்கப் பள்ளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களான உடல் வெப்பநிலை அளவீட்டு மானி, முகக் கவசங்கள், கிருமி நாசினி, சோப் திரவம் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, செஞ்சிலுவை சங்கத் தலைவரும், சிதம்பரம் கோட்டாட்சியருமான கே.ரவி தலைமை வகித்து பாதுகாப்பு உபகரணங்களை பள்ளித் தலைமை ஆசிரியைகள் ஜெயக்கொடி, மலா்கொடி, தேவி, ஈஸ்வரி ஆகியோரிடம் வழங்கினாா் (படம்). செஞ்சிலுவை சங்க துணைத் தலைவா் கனகசபை, செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல் கோத்தாரி, மேலாண்மைக் குழு உறுப்பினா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.கே.நகர்: கைப்பற்றும் முயற்சியில் திமுக - அதிமுக!

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

திருத்தணியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
உனக்கு நீயே ஒளி!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


