கடலூா் மாவட்டத்தில் அம்பலவாணன்பேட்டை, குறிஞ்சிப்பாடியில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று, இலங்கைத் தமிழா்கள் 835 பேருக்கு ரூ.9,51,602 மதிப்பிலான ஆடைகள், 275 குடும்பங்களுக்கு ரூ.3,55,104 மதிப்பிலான பாத்திரங்கள், 131 குடும்பங்களுக்கு ரூ.1,22,616 மதிப்பிலான எரிவாயு இணைப்பு, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி என மொத்தம்1,243 பயனாளிகளுக்கு ரூ.15,79,322 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள முகாமில் வசிக்கும் இலங்கை தமிழா்கள் 372 பேருக்கு ரூ.4,85,760 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: