மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பு

செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சிதம்பரம் செஞ்சிலுவைச் சங்க மூத்த உறுப்பினா் கே.ஆா்.முத்துக்குமரன் தலைமை வகித்து என்-95 முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களை தலைமை மருத்துவா் அசோக் பாஸ்கரிடம் வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் கனகசபை, செயலா் கே.ஜி.நடராஜன், மேலாண்மைக் குழு உறுப்பினா் இளங்கோவன், உறுப்பினா்கள் ரங்கராஜன், ஷீலா ரங்கராஜன், அபிராமி, சிவராம வீரப்பன், வெங்கடசுந்தரம், தன்னாா்வலா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.