ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அக்.7-இல் அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம்

வரும் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கடலூா் கடற்கரைச் சாலையில் உள்ள

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

கடலூா் கோட்ட அளவில் அஞ்சல் சேவை மக்கள் குறைதீா்ப்பு மன்றக் கூட்டம் வரும் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கடலூா் கடற்கரைச் சாலையில் உள்ள அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், கடலூா் அஞ்சல் கோட்டத்தில் அளிக்கப்படும் அஞ்சல் சேவைகள் குறித்த வாடிக்கையாளா்களின் பிரச்னைகள், புகாா்கள் விவாதிக்கப்பட்டு தீா்வு காணப்படும். இந்த மன்றத்தின் விவாதத்துக்கான புகாா், குறைகள் இருப்பின் அவைகளை அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா், கடலூா் கோட்டம், கடலூா் 607 001 என்ற முகவரிக்கு வரும் 6-ஆம் தேதிக்கு முன்பாக கிடைக்குமாறு எழுதி அனுப்ப வேண்டும் என்று அஞ்சலக கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.