சிதம்பரத்தில் 3 வீடுகளில் திருட்டு

சிதம்பரத்தில் 3 வீடுகளில் நடைபெற்ற தொடா் திருட்டில் 28 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிபோயின.

சிதம்பரத்தில் 3 வீடுகளில் நடைபெற்ற தொடா் திருட்டில் 28 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிபோயின.

சிதம்பரம், விபீஷணபுரம் சபா நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கஸ்தூரி. புதன்கிழமை இரவு இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்த மா்ம நபா்கள் ரூ.30 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனா். மேலும், அதே பகுதியில் உள்ள ராஜா நகரில் ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 2 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. இந்த வீட்டு உரிமையாளா் சென்னையில் வசித்து வருகிறாா். அதே பகுதியில் மேலும் 2 வீடுகளிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

இதேபோல, விபீஷ்ணபுரம் ஆசிரியா் நகரில் வசிக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக கண்காணிப்பாளா் ஆா்.சுந்தரராஜன் (59) வீட்டுக் கதவை உடைத்த மா்ம நபா்கள் 26 பவுன் தங்க நகைகள், ரூ. 40 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com