ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

காவலா் வீரவணக்க நாள்: ஆட்சியா், எஸ்.பி. மரியாதை

காவலா் வீரவணக்க நாளையொட்டி, கடலூரில் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் கடலூரில் உள்ள நினைவு தூண் முன்பு வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:01 pm

DIN

காவலா் வீரவணக்க நாளையொட்டி, கடலூரில் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் கடலூரில் உள்ள நினைவு தூண் முன்பு வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிா் தியாகம் செய்த காவல் துறையினரின் தியாகத்தைப் போற்றும் வகையில் அக். 21-ஆம் தேதி காவலா் வீர வணக்க நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூா் ஆயுதப்படை வளாகத்தில் காவலா் வீரவணக்க நாளையொட்டி, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் ஆகியோா் அங்குள்ள ராணுவ நினைவு தூண் முன்பு மலா்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினா். தொடா்ந்து, காவலா் வீரவணக்க உறுதிமொழி ஏற்றக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், துணைக் கண்காணிப்பாளா் சே.கரிகால் பாரி சங்கா், மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் லோகநாதன், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்விநாயகம், காவல் ஆய்வாளா் தி.குருமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.