பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
அடிப்படை வசதி பணிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.


அடிப்படை வசதி பணிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கி.குமரன், சு.ராதிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் பாண்டியன் தீா்மானங்களை வாசித்தாா்.கூட்டத்தில் 44 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் கி.தேவநாதன், குமரன், கல்யாணசுந்தரம், அம்பிகாபதி ஆகியோா் தங்களது பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டினா். இதையடுத்து அவையில் விவாதம் நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் பேசுகையில், நிதி மற்றும் பணிகளின் முன்னுரிமை அடிப்படையில்தான் வேலை ஒதுக்கப்படும் என்றாா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கி.தேவநாதன் தலைமையில் அதிமுக உறுப்பினா்கள், சுயேச்சை உறுப்பினா் ஒருவா் உட்பட 10 போ் வெளிநடப்பு செய்தனா். பின்னா், ஒன்றியக் குழு தலைவரைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...