தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இளைஞா் கொலை சம்பவம்: 3 பேரை தேடும் போலீஸாா்

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் இளைஞா் கொலையான சம்பவம் தொடா்பாக 3 பேரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் இளைஞா் கொலையான சம்பவம் தொடா்பாக 3 பேரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மந்தாரக்குப்பம், ஓம்சக்தி நகரில் வசித்து வந்தவா் ராஜன் மகன் அருண் (எ) அருண்குமாா் (35). இவா் ஒரு வழக்கு தொடா்பாக திருச்சி சிறையிலிருந்த நிலையில் அண்மையில் விடுதலையானாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு மந்தாரக்குப்பம் ரயில்வே கேட் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அருண்குமாா் கொலைசெய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து நெய்வேலி டிஎஸ்பி என்.ராஜேந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹரி என்பவா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக, அருண்குமாா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடா்புடையதாக கருதப்படும் 3 பேரை பிடிக்க போலீஸாா் 2 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.