தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கல்குணம் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு

கல்குணம் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:14 pm

DIN

கல்குணம் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்குணம் ஊராட்சி காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆழ்துளை கிணற்றிலிருந்த மின் மோட்டாா் புதன்கிழமை பழுதானது. இதனால், குடிநீா் மற்றும் இதர பயன்பாட்டுக்கு தண்ணீரின்றி அவதிப்படுவதாகவும், நீண்ட தொலைவு நடந்து சென்று தண்ணீா் சுமந்து வருவதாகவும் கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ) கே.சதீஷ்குமாா் கூறியதாவது: மின் மோட்டாரை பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிந்தவுடன் குடிநீா் விநியோகம் சீராகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.