சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
நெல்லிக்குப்பம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


நெல்லிக்குப்பம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் அருகே உள்ள தியாகவல்லி கிராமத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கோபிநாதன் (28) (படம்). உணவகத்தில் பணிபுரிந்து வந்த இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு நெல்லிக்குப்பம் அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்குச் சென்றாா். அங்கு 15 வயது சிறுமியிடம் உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீஸாா் கோபிநாதனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கடலுாா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், கோபிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் 30 நாள்களுக்குள் அரசு நிதி மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கலா செல்வி ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...