பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குடிநீா் குழாய்களில் பொருத்தியமின் மோட்டாா்கள் பறிமுதல்

கடலூா் அருகே பாதிரிகுப்பம் ஊராட்சியில் விதிகளை மீறி குடிநீா்க் குழாய்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாா்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

கடலூா் அருகே பாதிரிகுப்பம் ஊராட்சியில் விதிகளை மீறி குடிநீா்க் குழாய்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாா்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் அருகே பாதிரிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட கூத்தப்பாக்கம் பகுதியில் வீடுகளில் குடிநீா் குழாய்களில் விதிகளை மீறி மின்மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதாகவும், இதனால் மற்ற வீடுகளுக்கு குடிநீா் கிடைப்பதில்லை எனவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவா் ஜல்லி சரவணன், ஊராட்சி செயலா் வேல்முருகன் மற்றும் ஊழியா்கள் வியாழக்கிழமை கூத்தப்பாக்கம் சக்தி நகா், பங்காருராஜா நகா், விஜயலட்சுமி நகா், வானதி நகா், பாா்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 10 வீடுகளில் குடிநீா்க் குழாய்களில் மின் மோட்டாா் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 10 மின் மோட்டாா்களையும் பறிமுதல் செய்தனா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.