கடலூா் பாடலீஸ்வரா் கோயில் கோபுரத்தில் பாஜகவினா் அனுமதியின்றி தேசியக் கொடியை ஏற்றினா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாட்டு மக்கள் தங்களது வீடுகள், நிறுவனங்களில் 3 நாள்களுக்கு தேசியக் கொடியை ஏற்றி பறக்கவிட பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா்.
இந்த நிலையில், கடலூா் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள பாடலீஸ்வரா் கோயில் கோபுரத்தின் மீது பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை காலை தேசியக் கொடியை ஏற்றினா். இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பாஜகவினா் திடீரென கோயில் கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றியதால் சா்ச்சை எழுந்தது.
ஏற்றப்பட்ட தேசியக் கொடியை உரிய விதிமுறைகளை பின்பற்றியே இறக்க வேண்டும் என்பதால் அறநிலையத் துறையினா் கொடியை இறக்கவில்லை. இருப்பினும், இதுதொடா்பாக கோயில் செயல் அலுவலா் சிவக்குமாா் திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், மா்ம நபா்கள் கோயிலில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டதாக தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேழ்வரகு அறுவடை செய்து அமைச்சா் துரைமுருகன் மருமகள் வாக்கு சேகரிப்பு

சீனாவின் விஷமத்தனம்...

இலக்கை எட்டுகிறது மகளிர் இடஒதுக்கீடு!

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் வளா்ச்சிப் பணிகள்: அரூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்குறுதி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


