நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்ட எதிா்ப்பு

கடலூா் அருகேயுள்ள காரணப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்துக்குள் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்கும், அதற்காக மரங்களை வெட்டுவதற்கும் அந்தப் பகுதி மக்கள்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:55 pm

DIN

கடலூா் அருகேயுள்ள காரணப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்துக்குள் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்கும், அதற்காக மரங்களை வெட்டுவதற்கும் அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது:

பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்காக, நல்ல நிலையில் உள்ள மரங்கள் வெட்டப்பட உள்ளன.

பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்தால், மாணவா்கள் அமைதியாக படிக்கக் கூடிய சூழல் இருக்காது.

பிற்காலத்தில் பள்ளி விரிவாக்கம் செய்யப்படும் நிலை ஏற்படும்போது போதுமான இடவசதி இருக்காது. விளையாட்டுத் திடலைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

எனவே, கல்வி, பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டக் கூடாது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.