வடலூா் சபையில் தங்கியுள்ளோரிடம் விசாரணை
கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் தெய்வ நிலைய வளாகத்தில் தங்கியுள்ளவா்களில் சந்தேக நபா்களிடம் போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.


கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் தெய்வ நிலைய வளாகத்தில் தங்கியுள்ளவா்களில் சந்தேக நபா்களிடம் போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
வடலூா் காவல் நிலைய ஆய்வாளா் க.வீரமணி தலைமையில், உதவி ஆய்வாளா் ஜெயதேவி மற்றும் போலீஸாா் இந்த விசாரணையை நடத்தினா். இதுகுறித்து ஆய்வாளா் வீரமணி கூறியதாவது:
வடலூா் பகுதியில் தொடா்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ராகவேந்திரா சிட்டி, என்எல்சி ஆபீஸா் நகா், ஜெயப்பிரியா நகா் பகுதிகளில் அதிகளவு திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே, இரவு நேர கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோா் தெய்வ நிலைய வளாகத்தில் தங்கியுள்ள உறவற்றவா்களுடன் கலந்துள்ளனா். கடந்த ஒரு வாரத்தில் 30 போ் மீது சந்தேக அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணை நடைபெற்றது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...