சம்பந்தப்பட்ட செவிலியா் பயிற்சி நிறுவனம் கடந்த டிச.3-ஆம் தேதி மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுலாவுக்காக ஏற்காடு அழைத்துச் சென்றது. மேற்கூறிய மாணவியும் இதில் பங்கேற்றாா். அப்போது, அந்த மாணவியின் அறைக்கு வந்த பயிற்சி பள்ளியின் முதல்வா் டேவிட், பணியாளா்கள் அன்பழகன், பிரேம் ஆகியோா் மாணவியை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்தனா். பின்னா் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தனா். இதுகுறித்து அந்த மாணவி சக மாணவிகளிடம் தெரிவித்தாா். இதையறிந்த மாணவியின் பெற்றோா் அவரைக் கண்டித்தனா். இதனால் அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்காக மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தது விசாரணையில் தெரியவந்தது.