ரேஷன் கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறை உருவாக்க வேண்டும், அரசுப் பணியாளா்களுக்கு வழங்குவதுபோல 31 சதவீத அகவிலைப் படியை நியாய விலைக் கடை பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
இவா்களது போராட்டம் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்த நிலையில் கடலூா் மாவட்டத்தில் பெரும்பாலான நியாய விலைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், கடலூா் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் வி.முத்துபாபு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பி.கந்தன், ஆா்.தேவராஜ், ராமானுஜம், கே.குமரன், ஜி.பிரபாகரன், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலா் மு.ராஜாமணி கண்டன உரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...