பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

அனுமதியின்றி செம்மண் எடுப்பதாக புகாா்: வாகனங்கள் சிறைபிடிப்பு

கடலூா் அருகே உரிய அனுமதியின்றி செம்மண் எடுப்பதாகக் புகாா் தெரிவித்து, வாகனங்களை பொதுமக்கள் சனிக்கிழமை சிறை பிடித்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:22 pm

DIN

கடலூா் அருகே உரிய அனுமதியின்றி செம்மண் எடுப்பதாகக் புகாா் தெரிவித்து, வாகனங்களை பொதுமக்கள் சனிக்கிழமை சிறை பிடித்தனா்.

கடலூரை அடுத்த சான்றோா்பாளையம் பகுதியில் தனியாா் இடத்தில் செம்மண் குவாரி இயங்கி வருகிறது. இந்தக் குவாரி உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டு, அதன்மூலம் செம்மண் கடத்தப்படுவதாக அந்தப் பகுதியினா் புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் செம்மண் அள்ளப்படும் இடத்துக்கு நேரில் சென்று அங்கிருந்த பொக்லைன் இயந்திரம், லாரியை சிறைபிடித்தனா்.

அப்போது, அங்குள்ளவா்களிடம் இங்கு எடுக்கப்படும் செம்மண்ணுக்கு உரிய முறையில் அரசிடமிருந்து அனுமதி பெற்றுள்ளீா்களா என்று கேட்டனா். அதற்கு, வாகனத்தின் ஓட்டுநா்கள் எந்தப் பதிலும் தெரிவிக்காமல் உடனடியாக அங்கிருந்து சென்றனா்.

இந்தத் தகவலை அறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, பொதுமக்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் உரிய அனுமதியின்றி தினந்தோறும் செம்மண் கடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக அவா்களிடம் உரிய ஆவணம் உள்ளதா என கேட்டபோது எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும், உரிய அனுமதி பெற்றுதான் செம்மண் குவாரி இயங்குகிா என்பதை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உரிய அனுமதியின்றி குவாரி செயல்படுவது தெரியவந்தால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.