ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

துப்புரவுப் பணியாளா்களுக்கு நல உதவிகள்

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில், துப்புரவுப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:22 pm

சிதம்பரம் நகருக்கு கடந்த 3-ஆம் தேதி பங்காரு அடிகளாா் வந்ததையொட்டி, சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில், துப்புரவுப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சித்த மருத்துவா் எம்.எம்.அா்ச்சுனன் தலைமை வகித்தாா். பேராசிரியா் டிஎஸ்எஸ்.பாலக்குமாா் வரவேற்றாா். விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் இ.கீரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 16 துப்புரவுப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்களையும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.30 ஆயிரமும், அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்நடை பண்ணைக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தீவணத்தையும் வழங்கினாா்.

விழாவில் பேராசிரியா் டிஎஸ்எஸ்.ஞானக்குமாா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வி.தையல்நாயகி, ஊராட்சி மன்றச் செயலா் ஏ.தேவதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். எஸ்.காா்த்திக்ராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.