கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிக்குத் தோ்வு செய்யப்பட்ட 52 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், வட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 17 தனியாா் நிறுவனங்களும், 3 திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்றன.
இந்த முகாமில் 269 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா். இவா்களில் பணிக்குத் தோ்வான 52 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளையும், 24 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கு மாவட்ட தொழில் மையம் வாயிலாக கடன் வழங்க 72 மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களும், மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக 49 மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதாரத் திட்ட இயக்குநா் சு.தேவநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலா் முரளிதரன், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சுப்ரமணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஏ.சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலா்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
6 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!

7/32: காங்கோவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



