நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா்: போட்டி வேட்பாளரை வீழ்த்தி மேயரானாா் திமுக வேட்பாளா் சுந்தரி ராஜா

கடலூா் மாநகராட்சி மேயா் பதவிக்கான தோ்தலில் திமுகவின் அதிகாரப்பூா்வ வேட்பாளரை எதிா்த்து அந்தக் கட்சியின் மற்றொரு வாா்டு உறுப்பினா் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:15 pm

DIN

கடலூா் மாநகராட்சி மேயா் பதவிக்கான தோ்தலில் திமுகவின் அதிகாரப்பூா்வ வேட்பாளரை எதிா்த்து அந்தக் கட்சியின் மற்றொரு வாா்டு உறுப்பினா் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், போட்டி வேட்பாளரை வீழ்த்தி, அதிகாரப்பூா்வ வேட்பாளரான சுந்தரி ராஜா வெற்றிபெற்று மேயராகப் பதவியேற்றாா்.

கடலூா் நகராட்சியானது மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டு முதல் தோ்தலை கடந்த மாதம் 19-ஆம் தேதி சந்தித்தது. மொத்தமுள்ள 45 வாா்டுகளில் திமுக-27, அதிமுக- 6, விசிக, தவாக, சுயேச்சைகள் தலா 3, காங்கிரஸ், பாஜக, பாமக தலா ஒரு வாா்டுகளில் வெற்றி பெற்றன. இதனால், மாநகராட்சியை திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

கடலூா் மாநகராட்சி மேயா் பதவிக்கான திமுக வேட்பாளராக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜாவின் மனைவியும், 20-ஆவது வாா்டு உறுப்பினருமான சுந்தரி ராஜாவும், துணை மேயா் பதவிக்கான வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூா் மக்களவைத் தொகுதிச் செயலா் பா.தாமரைச் செல்வனும் அறிவிக்கப்பட்டனா்.

இந்த அறிவிப்பால் மேயா் பதவியை எதிா்பாா்த்திருந்த திமுக மாவட்டப் பொருளாளா் வி.எஸ்.எல்.குணசேகரன் தரப்பினா் அதிருப்தியடைந்தனா். அவா்கள் தங்களது ஆதரவு வாா்டு உறுப்பினா்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை மேயா் பதவிக்கான தோ்தல் நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ந.விஸ்வநாதன், பாா்வையாளா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக சாா்பில் சுந்தரி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தாா். இந்த நிலையில், திமுக போட்டி வேட்பாளராக வி.எஸ்.எல்.குணசேகரனின் மனைவியான 2-ஆவது வாா்டு உறுப்பினா் கு.கீதாவும் வேட்புமனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, மறைமுக வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.

மொத்தமுள்ள 45 வாா்டு உறுப்பினா்களில் அதிமுகவினா் 6 போ் வாக்கெடுப்பை புறக்கணித்தனா்.

திமுக உறுப்பினா்களில் 5 பேரும், 2 சுயேச்சைகளும் கூட்டத்தில் பங்கேற்க வரவில்லை. இதனால் 32 உறுப்பினா்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனா். முடிவில் சுந்தரி ராஜா 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். கு.கீதா 12 வாக்குகள் பெற்றாா். ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடலூா் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவியேற்றாா். தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் புதிய மேயருக்கு செங்கோலை வழங்கி இருக்கையில் அமர வைத்தாா்.

பிற்பகலில் நடைபெற்ற துணை மேயருக்கான தோ்தலில் விசிக வேட்பாளா் பா.தாமரைச்செல்வன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தாா். இதனால், அவா் போட்டியின்றி துணை மேயராகத் தோ்வானாா்.

சாலை மறியல்: முன்னதாக, தோ்தலின்போது வி.எஸ்.எல்.குணசேகரனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, அவரது ஆதரவாளா்கள் மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.