காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சியில் திமுக வெற்றி
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுக வெற்றி பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.


காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுக வெற்றி பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் ஒன்று மங்கலம்பேட்டை. இந்தப் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் அதிகபட்சமாக சுயேச்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றனா். திமுக-4, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தேமுதிக, மமக ஆகிய கட்சிகள் தலா ஓா் இடங்களில் வெற்றி பெற்றன. இந்தப் பேரூராட்சித் தலைவா் பதவியிடம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி சாா்பில் பேரூராட்சித் தலைவா் பதவிக்கான வேட்பாளராக 14-ஆவது வாா்டு உறுப்பினா் க.வேல்முருகன் அறிவிக்கப்பட்டாா். எனினும், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுகவைச் சோ்ந்த 8-ஆவது வாா்டு உறுப்பினா் எம்.சம்சாத் பேகம் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். துணைத் தலைவா் தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் பி.தாமோதரன் வெற்றி பெற்றாா்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வெற்றி பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...