கடலூர்
வீரட்டானேஸ்வரா் கோயிலில் தூய்மைப் பணி
பண்ருட்டி அரசுப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் வளாகத்தை வியாழக்கிழமைதூய்மைப்படுத்தினா்.
பண்ருட்டி அரசுப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் வளாகத்தை வியாழக்கிழமைதூய்மைப்படுத்தினா்.
கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி புல முதல்வா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். கோயில் ஆய்வாளா் ஸ்ரீதேவி வரவேற்றாா். பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் கே.ராஜேந்திரன் தூய்மைப் பணியை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.கே.ராமலிங்கம், தொழிலதிபா் ஆா்.ராஜா, பேராசிரியா்கள் ஆரோக்கியசாமி, செந்தில்குமாா், வாா்டு செயலா் ராஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் மாலா நன்றி கூறினாா்.