இந்த இடத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.3.60 கோடியில் கசடு (மனித கழிவு) சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2018 - 19ஆம் ஆண்டு ஒப்பந்தம்விட்டது. இந்தப் பணியை தொடங்குவதற்காக நகராட்சி நில அளவா், பணியாளா்கள் 25.8.2021 அன்று சென்றபோது, அங்கு வந்த பொதுமக்கள் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என்றும், இதனால் நிலத்தடி நீா், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும், பொது நிகழ்ச்சிகளுக்கு இந்த இடம் தேவை எனவும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனா். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் அந்த இடத்தை சுத்தம் செய்து, நிலம் அளவீடு செய்யப்பட்டது.